Posts

Showing posts from April, 2024

உயிர்த்த ஆண்டவருடன் சந்திப்பு ENCOUNTER WITH THE RISEN LORD

Image
  உயிர்த்த ஆண்டவருடன் சந்திப்பு (யோவான் 20:24-29 ) தற்கால உலகில் பூட்டிய அறைக்குள் இருந்த அனுபவத்தினை 2019-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று நமக்கு தந்தது. இந்தப் பெருந்தொற்று நம்மில் பலருக்கு அவநம்பிக்கையையும் , தெளிவின்மையையும் அதிக அளவில் ஏற்படுத்தியது. யாரிடத்தில் போவது? யாரை நம்புவது? என்ன செய்வது? என்கிற தெளிவில்லாதபடி பூட்டிய அறைக்குள்ளாய் முடங்கி போன அனுபவத்தை இந்த நேரத்தில் நாம் நினைவு கூறுவோம். இதேபோன்று இயேசு கிறிஸ்துவின் பாடு மரணத்தின் போது பூட்டியறைக்குள்ளாய் அவநம்பிக்கையிலும் , தெளிவின்மையிலும் இருந்த சீடர்கள் , அதிலும் குறிப்பாக தோமாவின் அனுபவத்திற்கு மிகவும் பொருந்தி செல்வதாய் அமைகிறது. இந்தியாவின் திருத்தூதர் என அழைக்கப்படுபவர் தூய தோமா. திருத்தூதர் தோமா வழியாக நம் நாட்டின் முன்னோர்கள் இயேசுவின் விலாவுக்குள் தங்கள் கைகளையும் , இயேசுவின் கைகளில் தங்கள் விரல்களையும் இட்டார்கள் என நினைக்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவுக்கும் இந்தியாவுக்குமான இணைப்புக் கோடு தூய தோமா. நம்பிக்கை கொள்தலுக்கான பாடமாக , அதுவும் காணாமலே நம்புவதற்கான பாடமாக நம்மு