Posts

Showing posts from 2022

கொஞ்சத்தில் உண்மை- ELOCUTION

Image
  கொஞ்சத்தில் உண்மை ( மத் 25 :21) சிறு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் இறைப்பாலகன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் , நீதியாய் நியாயம் தீர்க்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும் என் போன்ற போட்டியாளர்களுக்கும் என் அன்பின் வணக்கங்கள் . எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு “ கொஞ்சத்தில் உண்மை ” என்பதாகும் . இதற்கு ஆதாரமான திருமறை பகுதி மத்தேயு 25-ஆம் அதிகாரம் 21-ஆம் திருவசனம் . இதை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் . திருமறை யில் மத்தேயு 25-ஆம் அதிகாரம் மூன்று உவமைகளை கொண்டு பரலோக ராஜ்யத்தின் சிறப்புக்களை விளக்குகிறது . அவைகளில் மூன்றாவது உவமையை தான் “தாலந்து உவமை” என்கிறோம் . இங்கு ஒரு எஜமான் புறதேசம் புறப்படும் போது தன் ஆஸ் தி களை தன் மூன்று வேலை க்காரர்களிடம் ஐந்து , இரண்டு, ஒன்று என பிரித்து, அவர்களின் திறமைக்கு தக்கதாக கொடுத்துவிட்டு செல்கிறார் . சில காலங்கள் சென்ற பின்பு அந்த எஜமான் திரும்பி வந்து தான் கொடுத்த ஆசிகளை தன் வேலை க்காரர்களிடம் திரும்ப பெறுகிறார். ஐந்து தா லந் தை வாங்கின வேலை க்கார ன் தன் எஜமானிட

இறைமாட்சியை வெளிப்படுத்தும் இறையரசுக்குரியோர்

Image
இறைமாட்சியை வெளிப்படுத்தும் இறையரசுக்குரியோர் ( மத்தேயு 21:16) இறையரசுக்குரியோரால் தாவீதின் மைந்தன் என போற்றப்படும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற இனிய நல்நாமத்தை போற்றி , நீதியாய் நியாயம் தீர்க்க வீற்றிருக்கும் நடுவர்களை வணங்கி , என் போன்ற போட்டியாளர்களை வாழ்த்தி , அவையோருக்கும், சபையோருக்கும் வணக்கம் சொல்லி, “ இறைமாட்சியை வெளிப்படுத்தும் இறையரசுக்குரியோர் ” என்னும் தலைப்பில் , என் சிந்தையில் எழுந்த கருத்துகளை திருமறை வெளிச்சத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . இதற்கு ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ள திருமுறைப்பகுதி தூயமத்தேயு எழுதிய நற்செய்தி நூல் 21 - ஆம் அதிகாரம் 16 - ஆம் திருவசனம் . இந்த திருமறை பகுதியில் இறையரசுக்குரியோராய் அடையாளப்படுத்தப் படுகிறவர்கள் பாலகரும், குழந்தைகளுமே . ஆம் ! இவர்களே இறைவனின் பிரதிநிதிகள், குழந்தைகள் இறைவன் கொடுக்கும் வரம் , இவர்களே இறையரசின் பங்காளர்கள் என்பதை மாற்கு 10:14 - இல் சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் ; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள் ; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி ஆண்டவர

மோசே வழியாய் பத்து கற்பனைகள் - The Ten Commandments Through Moses

Image
  மோசே வழியாய் பத்து கற்பனைகள் நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ( கலாத்தியர் 6:9 ) இஸ்ரவேலர்களின் 40 வருட வனாந்திரப் பயணம் கடவுளின் உடன் இருத்தலையும் , இக்கட்டான சூழலில் ஆண்டவர் தங்களை விடுதலையாக்குவார் என்கிற ஆழமான நம்பிக்கையும், கடவுளின் சமூகம் தங்கள் முன்பாக செல்கிறது என்கிற உறுதிப்பாட்டையும் இஸ்ரவேல் வாழ்வில் ஏற்படுத்தியது . அதன் ஒரு நிகழ்வாகவே கடவுள், மோசே வழியாய் இஸ்ரவேலருக்கு கொடுத்த நித்திய காலத்திற்குமான பத்து கற்பனைகள் விளங்குகிறது . அவைகளை பெறுவதற்கான முயற்சிகளில் மோசையின் செயல்பாடு எத்தகையதாக இருந்தது ? அது இஸ்ரேல் வரலாற்றில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தின என்பதனை திருமறை பின்னணியத்தோடு சிந்திப்போம் . புதிய பாதையை உருவாக்குகிறார் மோசே மோசேயை குறித்து சிந்திக்கிற போது, அடிமைத்தன நுகத்தில் தவித்து வந்த இஸ்ரவேலருக்கான நம்பிக்கை தான் மோசே . அவருடைய அழைப்பே இயற்கைக்கும், மனித எண்ணங்களுக்கும் முற்றிலும் எதிர்மறையானது. பொதுவாக நெருப்பில் எரிந்து சாம்பலாகாத அல்லது சேதமடையாத எந்த ஒரு பொருளுமே இருக்க முடியாது

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

Image
  பள்ளி ஆண்டுவிழா  வாழ்த்துரை “ கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் ” என்கிற திருவார்த்தையை நினைவில் கொண்டு ,  சிறப்புமிக்க இப்பள்ளியின் ஆண்டுவிழாவில் வாழ்த்துரை வழங்குவதில் பெ ரு ம் மகிழ்ச்சி கொள்கிறேன் . இந்த வாய்ப்பினை நல்கி இருக்கிற பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய இப்பள்ளியின் தாளாளர் , தலைமை ஆசிரியர் , அலுவலக பணியாளர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர் மற்றும் மாணவ மாணவியரை உள்ளத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்தி வணங்குகிறேன் . “மாதா , பிதா , குரு , தெய்வம்” என்பதற்கிணங்க நமது பெற்றோருக்கு அடுத்தபடியாக நம்மை வழிநடாத்துபவர்கள் ஆசிரியர்களே. நல்ல குருவை அடைந்தவர்களே சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவர் என்று சொல்வதுண்டு. நம் பெற்றோர்களுக்கு அடுத்து ஒழுக்கத்தையும், அறிவையும் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பள்ளிக்கூடம் தான் . பல அறிஞர்களையும் , கவிஞர்களையும் , மேதைகளையும் , மருத்துவர்களையும் , விளையாட்டு வீரர்களையும் , சாதனையாளர்களையும் , விஞ்ஞானிகளையும் இந்த உலகிற்கு அறிமுகப் படுத்துவது பள்ளியும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது . இந்த உலகத்