கொஞ்சத்தில் உண்மை- ELOCUTION

 கொஞ்சத்தில் உண்மை (மத் 25:21)

சிறு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் இறைப்பாலகன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில், நீதியாய் நியாயம் தீர்க்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும் என் போன்ற போட்டியாளர்களுக்கும் என் அன்பின் வணக்கங்கள். எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு கொஞ்சத்தில் உண்மை என்பதாகும். இதற்கு ஆதாரமான திருமறை பகுதி மத்தேயு 25-ஆம் அதிகாரம் 21-ஆம் திருவசனம். இதை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


திருமறையில் மத்தேயு 25-ஆம் அதிகாரம் மூன்று உவமைகளை கொண்டு பரலோக ராஜ்யத்தின் சிறப்புக்களை விளக்குகிறது. அவைகளில் மூன்றாவது உவமையை தான் “தாலந்து உவமை” என்கிறோம். இங்கு ஒரு எஜமான் புறதேசம் புறப்படும் போது தன் ஆஸ்திகளை தன் மூன்று வேலைக்காரர்களிடம் ஐந்து, இரண்டு, ஒன்று என பிரித்து, அவர்களின் திறமைக்கு தக்கதாக கொடுத்துவிட்டு செல்கிறார்.

சில காலங்கள் சென்ற பின்பு அந்த எஜமான் திரும்பி வந்து தான் கொடுத்த ஆசிகளை தன் வேலைக்காரர்களிடம் திரும்ப பெறுகிறார். ஐந்து தாலந்தை வாங்கின வேலைக்காரன் தன் எஜமானிடத்தில் வந்து தான் பெற்ற ஐந்து தாந்துகளை சேர்த்து பத்து தாலந்துகளாய் திரும்ப கொடுக்கிறார். இதைக் கண்ட எஜமான் அந்த ஊழியக்காரனின் கடின உழைப்பையும், அவரில் இருந்த உண்மை வாழ்வையும் கண்டு மகிழ்ச்சியோடு கூறுவதை தான் மத்தேயு 25:21-இல் காண்கிறோம்.

ஆம்! உண்மைக்கு கிடைக்கும் பரிசே அங்கீகாரமும், உயர்வும். நம் வாழ்வில் உண்மை இருந்தால், அது நம்மை மகிழ்ச்சி வாழ்வுக்கு வழி நடத்தும். அந்த உண்மை வாழ்வு பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க செய்யும் என்பதை தான் இந்த உவமை உறுதிப்படுத்துகிறது. அதேசமயம் ஒரு தாலந்தை வாங்கின ஊழியக்காரனோ தன் சோம்பேறிதனத்தால் அதை நிலத்திலே புதைத்து வைத்தான். தன் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தும், அதை பயன்படுத்த தவறி போனான்.  இதன் விளைவாக எஜமானின் கடும் கோபத்திற்கு காரணமானான், அவனிடத்தில் இருந்த ஒரு தாலந்தையும் இழந்து போனான். இறுதியில் அவனது சோம்பலுக்கு கிடைத்த பரிசு கண்ணீரும் கவலையும் தான்.

அன்பர்களே!! நாமும், நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வோம். அந்த வாய்ப்புகளில் உண்மையோடு செயல்படுவோம். அதன் வழியாய் மகிழ்ச்சியான வாழ்வை சொந்தமாக்குவோம் எனக்கு கூறி என் உரைக்கு திரையிடுகிறேன்.

ஆமென்.

Thank you for visiting my JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog.  😊

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)