Posts

Showing posts from 2021

குழந்தைகளிடம் எப்படி பேசுகிறோம்? எப்படி நடந்து கொள்கிறோம்? APPROACH TOWARDS CHILDREN

Image
  குழந்தைகளிடம் எப்படி பேசுகிறோம்? எப்படி நடந்து கொள்கிறோம்? எதிர்பார்ப்பதை குழந்தைகள் செய்யாதபோதோ! கோபம் ஏற்ப்படுத்தும் செயல்களை செய்யும்போதோ! சற்றும் யோசிக்காமல் அவர்களுக்கு எதிராய் பயன்படுத்தும் வார்த்தைகள் தான் வாயாடி, பிடிவாதக்காரன், முட்டாள், யோகம் இல்லாதவன், திருடன் … போன்றவை. அதிலும் குறிப்பாக “ முட்டாள் ” என்ற வார்த்தையை ஒருமுறையாவது பிறரிடத்திலிருந்து கேட்காமல் வாழ்வில் கடந்து வந்தவர்கள் ஒருவருமே இருக்க முடியாது . இத்தகைய “ வார்த்தை முத்திரைகள் ” குழந்தைகள் மீது தொடுக்கப்படும் ஒரு வகையான “ வன்முறை ” கலந்த தவறாகும் . இத்தகைய வார்த்தைகள் குழந்தைகளை காயப்படுத்துவதோடு நின்றுவிடாமல் , பிறர் சொல்வதை போன்றுதான் நான் இருக்கிறேனோ! என்கிற மன சோர்வையும், மன குழப்பத்தையும் ஏற்படுத்திவிடுகிறது . தங்கள் தன்னம்பிக்கையை இழக்க செய்யும் அவல நிலைக்கு குழந்தைகளை கொண்டு சென்றுவிடுகிறது . சமீபகாலமாக, நீட் (NEET) தேர்வுக்கு பயந்து தற்கொலை போன்ற செய்திகள் சுலபமாக கடந்து செல்லக்கூடிய ஒன்றாக இல்லை . இது குழந்தைகளின் எதிர்கால நலன் குறித்த அச்சத்தை தான் ஏற்படுத்துகிறது . இதற்கான காரணங்களி

பிலிப்பி திருச்சபை - Church of Philippi

Image
                                                           பிலிப்பி  -   மாற்றுருவாக்கத்தின்   திருச்சபை                     தூய பவுலார் தனது இரண்டாவது மிஷெனரி பயணத்தின் போது , மக்கதோனியா மாகாணத்தின் முக்கிய நகரமான பிலிப்பியில் ஒரு தேவாலயத்தை நிறுவினார் ( அப்: 16:11-40). அதுவே பிலிப்பி திருச்சபை என்றழைக்கப்படுகிறது . இயல்பாக, பவுல் தான் நிறுவிய திருச்சபைகளோடு   தொடர்பில் இருப்பதற்கு பயன்படுத்தும் யுக்திகளில் ஒன்று “கடித ப் பரிமாற்றம் .” அந்த வரிசையில் பிலிப்பியர் நிருபம் பவுலின் கடிதங்களில் ஒன்றாகும். இந்த நிருபம் “சிறைப்பிடிப்பு கடிதம்” ( Captivity Letter) , பவுலின் மகிழ்ச்சிக் கடிதம்   என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கடிதம் பிலிப்பி திருச்சபை மக்களின் வாழ்வியல் சிறப்புகளையும் , அந்த திருச்சபை கொண்டிருந்த மாற்றுருவாக்கத்தின் பண்பு நிலைகளையும் தெளிவுர எடுத்துரைக்கிறது. பிலிப்பி நகர மும் , மாற்றுருவாக்கத்தின் அவசியமும்: பிலிப்பி நகரம் வடக்கு கிரேக்கத்தில் , மக்கதோனியா மற்றும் திரேஸின் ( Thrace) கிழக்கு எல்லையில் அமையப் பெற்றிருந்தது . அதன் பண்டைய பெயர் “ krenides” ( கிர

UNITY IN DIVERSITY TOKYO 2020 I வேற்றுமையில் ஒற்றுமை டோக்கியோ ஒலிம்பிக் 2020

Image
  வேற்றுமைகளை ஒப்புக்கொண்டு ஒற்றுமைக்கு இலக்கணமான டோக்கியோ ஒலிம்பிக் 2020 விளையாட்டு உலகின் திருவிழா என்றால் அது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தான். இந்த வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை “TOKYO 2020” என்ற தலைப்பில் நடைபெற்றது . இது மாடர்ன் ஒலிம்பிக்கின் 32- வது விளையாட்டுப் போட்டியாகும். ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் பெரும் ஒவ்வொரு வெற்றியும் நாட்டின் வெற்றியாக பங்குபெறும் நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட ஒலிம்பிக் போட்டிகளில் 205 உலக நாடுகள் சார்பாக சுமார் 11300- க்கும் அதிகமான வீரர்கள் 33 விளையாட்டுகளைச் சேர்ந்த 339 நிகழ்வுகளில் பங்கு பெற்றனர். இந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் வேற்றுமை களை ஒப்புக்கொண்டு ஒற்றுமைக்கு இலக்கணமான சில சுவாரசியமான நிகழ்வுகளும் நடந்தேறியது.‌   அகதிகள் ஒலிம்பிக் அணி : (Refugee Olympic Team) வறுமை , வன்முறை , போர், பயங்கரவாதம், என பல காரணங்களுக்காக தங்கள் தாய்நாட்டை பிரிந்து வேறு ஒரு நாட்டுக்கு அடைக்கலம் நாடி செல்பவர்களே அகதிகள். அப்படி தங்கள் தாய்நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு அடைக்க