Posts

எங்கும் எதிலும் பெண்கள்- WOMENS' SUNDAY 2025

Image
எங்கும் எதிலும் பெண்கள் எண்ணாகமம் 27:1-11                                                                         2தீமோத்தேயு.1:1-8  லூக்கா 2:40-52 மண் தொடங்கி விண் வரையிலும் பெண்கள் எல்லா துறைகளிலும் வளர்ந்து உயர்ந்து நிறைந்து இருக்கிறார்கள் . தாய் திருநாடு , தாய் திருச்சபை , பூமித்தாய் , கடல் தாய் , நீதியரசி , மணவாட்டி சபை என சமூக , சமய , அரசியலிலும் பெண்கள் நிறைந்திருக்கிறார்கள் , முதன்மைப்படுத்தப்படுகிறார்கள் . அன்றாட வாழ்வில் பெண்களை மையப்படுத்தி பல சட்டங்களும் திட்டங்களும் கொண்டுவரப்படுகின்றன . பெண்கள் உரிமைக்கான பல குழுக்ககளும், அமைப்புகளும் உலகம் முழுவதும் நிறைந்துள்ளன . அதேசமயம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது . காலங்காலமாகத் தொடரும் அவலம்தான் என்றாலும், அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய நவீன நாட்களில் இன்னும்...

ELOCUTION 2024- TEACHER விண்ணரசின் மாதிரியாகும் சிறார்கள் (மத்தேயு 18:3)

Image
  விண்ணரசின் மாதிரியாகும் சிறார்கள் ( மத்தேயு 18 :3) விண்ணரசின் மாதிரிகளாக்க விண்ணக வாழ்வை துறந்து மண்ணுலக வாழ்வை ஏற்ற இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் நடுநிலை தவறா தீர்ப்பு வழங்குவதற்கு மாதிரியாக அமர்ந்திருக்கும் நடுவர்களை வணங்கி , என்னைப் போன்ற போட்டியாளர்களுக்கும் சபையோருக்கும் அவையோருக்கும் வணக்கம் சொல்லி விண்ணரசின் மாதிரியாகும் சிறார்கள் என்ற தலைப்பில் மத்தேயு 18 :3- யை ஆதாரமாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன் . இயேசுவின் சீடர்கள் அவர் வழியாக விண்ணரசின் தகவுகளை அநேகமுறை கேட்டிருக்கிறார்கள் . அதோடு மட்டும் நின்று விடாமல் பரலோக ராஜ்யத்தை குறித்து பல நிலைகளில் பிரசங்கிக்கவும் செய்திருக்கிறார்கள் . ஆனால் மத்தேயு 18 :1- இல் “ பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் ” என்கிற சீடர்களின் கேள்வியிலிருந்து விண்ணரசைக் குறித்த காரியங்களில் அவர்களுக்கு இருந்த தெளிவின்மையை புரிந்துக்கொள்ள முடிகிறது . மத்தேயு 18 - ஆம் அதிகாரத்தில் இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்குமான உரையாடலின் போது எழுப்பப்பட்ட இந்...

ELOCUTION 2024- POST ADULT பணிவை கற்பிக்கும் பணியாளர் (யோவான் 13:3-15)

Image
  பணிவை கற்பிக்கும் பணியாளர் ( யோவான் 13 : 3 - 15 ) பணிவின் மாதிரியாய் இப்பாரில் அவதரித்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் நடுவர் பணி ப் புரிய பணிவுடன் அமர்ந்திருக்கும் நடுவர்களையும் என்னைப் போன்று போட்டியாளர்களையும் சபையோரையும் அவையோரையும் அன்போடு வாழ்த்தி வணங்குகிறேன் . எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு பணிவை கற்பிக்கும் பணியாளர் என்பதாகும் . இதற்கு ஆதாரமான திருமறை ப் பகுதி யோவான் 13 : 3 - 15 வரை , இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பேச விரும்புகிறேன் . இயேசு கிறிஸ்துவின் நற்செய்திப் ப ணி ஆரம்பித்த க்காலம் தொடங்கி இதுவரையிலும் தன் சீடர்களோடு இணைந்து பிறருக்கு உபதேசித்து வந்த ஆண்டவர் யோவான் 13 3 முதல் 15 வரையிலான திருமறை ப் பகுதியில் தன்னோடு பயணித்து வந்த சீடர்களுக்கு உபதேசம் பண்ணுகிறார் . இது ஒரு வகையான உரையாடல் முறையில் அமைந்துள்ளது . இந்த உரையாடலின் பின்னணியத்தை சிந்திக்கும்போது இவ்வுலகில் தனது திருப் பணி நிறைவடைய ப் போகிறது எ ன்றறிந்த இயே சு கிறிஸ்து தனது செயலின் வழியாக வாழ்வியல் பா...

ELOCUTION 2024- ADULT காத்திருந்து கருணை பெற்றவர் (யோவான் 5: 1-12)

Image
  காத்திருந்து கருணை பெற்றவர் ( யோவான் 5 : 1 - 12 ) கருணைக்கடலாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய ந ல் நாமத்த ில் நடுநிலைத் தவறா தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும் என்னைப் போன்ற போட்டியாளர்களுக்கும் சபையோருக்கும் அவையோருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள் எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு காத்திருந்து கருணை பெற்றவர் என்பதாகும் இதற்கு ஆதாரமான திருமறை ப் பகுதி யோவான் 5 : 1 - 12 இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழு ந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பகிர்ந்து க் கொள்ள விரும்புகிறேன் . யோவான் 5 : 1 - 12 வரையிலான திருமறை ப் பகுதியில் சுமார் 38 வருட காலம் திமிர ் வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் வாழ்வு சொல்லப்பட்டிருக்கிறது . இந்த நிகழ்வினை யோவான் நற்செய்தியாளரை தவிர வேறு எந்த நற்செய்தி ஆசிரியர்களும் குறிப்பிடவில்லை . இந்த நிகழ்வில் சொல்லப்படும் மனித ர் ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல சுமார் 38 வருடமாக காத்திருந்து கடவுளின் கருணையை பெற்றுக் கொண்ட ார் . இந்த மனிதன் எந்த இடத்தில் இருந்தார் என்பதை நற்செய்தியாளர் சொல்லும்போது யோவான் 5 : 2...